Thursday, June 19, 2008

உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து புதுச்சேரி விவசாயிகள் சங்கம் - ஆர்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் உரக்கடைகளில் இருப்பு, விலைப்பட்டியல் சரியாக இருக்கிறதா என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும், அதிக விலைக்கு உரங்களை விற்கும் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தை எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் துவக்கிவைத்துக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். திரளான சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.