Thursday, June 19, 2008

ஏலச்சீட்டு நடத்தி 15 லட்ச ரூபாய் மோசடி செய்தவர் கைது

முருங்கப்பாக்கம் திரெளபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். பழக்கமானவர்கள் என்பதால் ஏராளமானோர் இவர்களிடம் 10ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் சீட்டு கட்டி வந்தனர். இந்நிலையில் ஏலம் எடுத்தவர்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் ஏலச்சீட்டு நடத்துவதாகக் கூறி 15 லட்ச ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. இதனிடையே தலைமறைவானவர்களைக் கண்டுபிடித்து தங்களுடைய பணத்தை மீட்டுத் தரும்படி ஏலச்சீட்டு கட்டியவர்கள் முதலியார்பேட்டை காவல்நிலையத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தலைமறைவான ஜானகிராமன் விழுப்புரத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது. அதன்பேரில் விழுப்புரத்திற்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஜானகிராமனைக் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

No comments: