புதுவையில் இருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 1500 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல மாநிலங்கள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு DSP ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில்நிலையத்தில் பிடிப்பட்ட அரிசியையும், திருபுவனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடோன்களில் ஆய்வுசெய்த போது கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசியையும் உப்பளம் மத்திய உணவுக்கிடங்கில் வைத்து சீல் வைத்தனர். அரிசி மூட்டைகள் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மக்கி வீணாகும் நிலைமை ஏற்பட்டது. இதனால் அவற்றை ஏலம்விட கலெக்டர் தேவநீதிதாஸ் உத்தரவிட்டார். மூன்று பகுதிகளாக அரிசி மூட்டைகளைப் பிரித்து ஏலம் விடப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மூன்றரை கோடி ரூபாய்க்கு டென்டர் கோரின. அந்த டென்டர் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தொகையை அந்நிறுவனங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு செலுத்தின. இந்நிலையில் அரிசி மூட்டைகளை குடோனில் இருந்து எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் டென்டர் எடுத்த தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலில் லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வருகின்றன. தாசில்தார் மகாதேவன், சிபிஐ அதிகாரிகள், உணவுக்கடத்தல் எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அரிசி மூட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சரக்குரயில் புதுவையிலிருந்து நாளை கர்நாடகாவிற்குப் புறப்பட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, June 19, 2008
ஏலம் விடப்பட்ட கடத்தல் அரிசி கர்நாடகாவிற்குச் செல்கிறது
புதுவையில் இருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 1500 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல மாநிலங்கள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு DSP ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில்நிலையத்தில் பிடிப்பட்ட அரிசியையும், திருபுவனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடோன்களில் ஆய்வுசெய்த போது கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசியையும் உப்பளம் மத்திய உணவுக்கிடங்கில் வைத்து சீல் வைத்தனர். அரிசி மூட்டைகள் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மக்கி வீணாகும் நிலைமை ஏற்பட்டது. இதனால் அவற்றை ஏலம்விட கலெக்டர் தேவநீதிதாஸ் உத்தரவிட்டார். மூன்று பகுதிகளாக அரிசி மூட்டைகளைப் பிரித்து ஏலம் விடப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மூன்றரை கோடி ரூபாய்க்கு டென்டர் கோரின. அந்த டென்டர் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தொகையை அந்நிறுவனங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு செலுத்தின. இந்நிலையில் அரிசி மூட்டைகளை குடோனில் இருந்து எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் டென்டர் எடுத்த தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலில் லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வருகின்றன. தாசில்தார் மகாதேவன், சிபிஐ அதிகாரிகள், உணவுக்கடத்தல் எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அரிசி மூட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சரக்குரயில் புதுவையிலிருந்து நாளை கர்நாடகாவிற்குப் புறப்பட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment