புதுச்சேரி வானொலி நிலையம் புதிதாக தனது பண்பலை சேவையைத் தொடங்கியுள்ளது. ரெயின்போ FM என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பண்பலை வரும் 21-ஆம் தேதியிலிருந்து தன்னுடைய சேவையைத் துவங்க உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி சமுதாயநலனைக் கருத்தில் கொண்டும் நிகழ்ச்சிகளை வழங்க புதுச்சேரி வானொலி நிலையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி வானொலிநிலைய இயக்குனர் கல்யாணிராமச்சந்திரன், "குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், எழுத்தறிவில்லாதவர்கள், கிராமப்புறத்தினர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ரசனையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நேயர்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்கலாம்" என்றார்.
கோரிமேடு அன்னைதெரசா சுகாதாரக் கல்வி நிலையத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர்.ரங்கசாமி கலந்து கொண்டு ரெயின்போ பண்பலையைத் துவங்கி வைக்கிறார். மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, எம்.பி. ராமதாஸ், பிரச்சார்பாரதியின் முதன்மை செயல்அலுவலர் லல்லி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment